Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, August 7, 2014

மெல்பனில் முருகபூபதியின் ‘ சொல்ல மறந்த கதைகள் ’ நூல் வெளியீடு

             இலங்கையின் படைப்பிலக்கியவாதியும்   பத்திரிகையாளருமான   தற்போது அவுஸ்திரேலியா  மெல்பனில் வதியும்   திரு. லெ.   முருகபூபதியின்   புதிய    புனைவிலக்கிய கட்டுரைத் தொகுதியின்   வெளியீட்டு விழா   எதிர்வரும்   23-08-2014   அன்று         மாலை  3   மணியிலிருந்து   6   மணிவரையில்   மெல்பனில் அமைந்துள்ள  Dandenong Central Senior Citizens Centre ( No 10, Langhorne Street , Dandenong, Victoria - 3175)   மண்டபத்தில்  நடைபெறவுள்ளது



 இந்த நூல் வெளியீட்டு விழா கலை, இலக்கிய   ஆர்வலர்   திரு. கந்தையா  குமாரதாசன்   தலைமையில் நடைபெறவுள்ளது.   இந்த நூல்  தமிழ்  நாடு  மலைகள் பதிப்பகத்தின்   வெளியீடாகும்.
இலங்கை - தமிழக - அவுஸ்திரேலியா - கனடா   மற்றும்   ஜெர்மனியில் வெளியாகும்   இதழ்கள்  , இணைய   இதழ்கள்   ஆகியனவற்றில்   பதிவான படைப்புகளின்   தொகுப்பாக இந்த தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது முருகபூபதியின்   இருபதாவது   நூலாகும்.   தமிழ்  நாடு  மலைகள் பதிப்பகத்தின்   வெளியீடாக இந்நூல் வெளி வருவது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment